Saturday, 30 March 2013

நாகப்பட்டினம், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாகையில் விசுவ இந்து பரிசத் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்


நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில்விசுவ இந்து பரிசத் அமைப்பினர் சார்பில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விசுவ இந்து பரிசத் அமைப்பு மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார்.
 
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாகையில் விசுவ இந்து பரிசத் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்போராட்டத்தில் தமிழர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை கண்டித்தும், மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு உடனடி தீர்வு காணாத மத்திய அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 
போராட்டத்தில் சிவசேனா இந்து அதிரடிப்படை மாநில தலைவர் தங்க.முத்து கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment