Thursday, 11 July 2013

தி.மு.க - வில் இணைந்தனர்



நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் சித்தாய்மூர் ஊராட்சியில் அதிமுக-விலிருந்து விலகி திமுக-வில் இணைந்தனர். சித்தாய்மூர் அம்மா பேரவை கிளை செயலாளர் மாரி என்கிற அன்பழகன் மற்றும் 3 வார்டு உறுப்பினர் ராணி ஆகியோர் அதிமுக விலிருந்து விலகி நாகை மாவட்ட கழக செயலாளர் விஜயன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். இதில் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் சரவணகுமார், சுப்ராயன், ராமமூர்த்தி,  சண்முகநாதன், முருகானந்தம், ராஜ், சிவசங்கரன், துரைசிங்கம், ரவி, ராமசந்திரன், சிவானந்தம், சித்திரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பழுதடைந்த மின்கம்பம்----- தலைஞாயிறு....




நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் உடைந்துஇ கீழே விழும் அபாய மின்கம்பத்தை உடனே மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் 13 வது வார்டில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த மின்கம்பம் கடும் மழையாலும்இ காற்றிலும்இ  இவரை விழாமல் தாக்குப்பிடித்து நின்று கொண்டிருக்கிறது. பழுதடைந்த மின்கம்பம் அக்ரஹாரம் மெயின்ரோட்டில் இருப்பதால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவஇ மாணவிகளும்இ பொது மக்களும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அந்த பகுதி மக்கள் பலமுறை மின்வாரியத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி  விட்டு புதிய மின்கம்பம் நட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்துள்ளனர்.

Tuesday, 25 June 2013

இயற்கையின் சீற்றமும் மனிதனின் தவறும்

உத்தரகாண்டத்தில் இயற்கை சீறியெழுந்தது. இது வரை 190 பேர் மாண்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருக்கக் கூடும் என்று செய்திகள் கூறுகின் றன. சீறும் வெள்ளம் அடித் துச் செல்லப்பட்ட உடல்களின் எண்ணிக்கை தெரியவில்லை. கேதார்நாத்தை புரட்டி எடுத்த வெள்ளத்தால் அடித்துச் செல் லப்பட்ட நாற்பது உடல்கள் ஹரித்துவாரில் கிடைத்துள் ளன என்ற செய்தி இதை உறு திப்படுத்துகிறது. பல ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் அழிந்து விட்டன. இருபதுக்கும் மேற் பட்ட பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
ஏராள மான கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டுள்ளன. வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பை களையும், சிதைவுகளையும் அகற்ற ஓராண்டு ஆகும் என்று உத்தரகாண்ட முதல்வர் கூறு வது அழிவின் பரப்பை விளக் குவதாகும்,இந்த சீரழிவுக்கு இயற்கை மட்டும் காரணம் அல்ல. மலை யோரச்சாலைகளின் திடம் குறித்து அவ்வப்போது எழும் குரல்களை அரசுகள் கண்டு கொள்ளவில்லை. உத்தர காண்டை மாறி மாறி ஆண்டு வந்த காங்கிரஸ், பாஜக அரசு கள் வளர்ச்சிக்கு முக்கியத் துவம் கொடுப்பதாக கூறி இன்று வாழ்விடத்தையே அழித்து விட்டன. மேம்பாட்டு திட்டம், மின் உற்பத்தி ஆலைகள் நிறு வல், அணைகள் கட்டுதல் என்று கூறி இமய மலையின் இயற்கை வளத்தை கொள் ளையடித்து விட்டார்கள். இத னால் பூமியின் உறுதி அசைக் கப்பட்டு விட்டது என்பதை மறந்து விடக்கூடாது.கடந்த சில நாட்களாக இந் திய வானிலை ஆய்வு மையம் விடுத்து வந்த அபாய எச் சரிக்கை போதுமான கண்டிப்பு டன் கூறப்படவில்லை. விடுக் கப்பட்ட எச்சரிக்கைகளுக் குரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ப தும் உண்மை. அலக்நந்தா நதி உற்பத்தியாகும் கோமுக் தொட ங்கி உத்தர்காசி வரையிலான 130 கி.மீ. தொலைவை சுற்றுச் சூழல் உணர்வு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற அறிவிக்கை இன்று வரை நடை முறைக்கு வரவில்லை. மாநி லத்தின் வளர்ச்சிக்கு இந்த அறிவிப்பு இடையூறாக இருக் கும் என்று கூறி உத்தரகாண்ட் அரசு இந்த அறிவிப்பை வெளி யிட மறுத்து வந்துள்ளது.
இயற்கை சுற்றுச்சூழலில் பாதிப்பு, பாகீரதி நதி, அலக் நந்தா நதிகளின் ஊடே நீர்மின் நிலையங்கள் அமைப்பதால் மலைச்சரிவுகளின் திடத் தன்மை சீர்குலைக்கப்படுதல், மண்வளம் அரிக்கப்படுவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைத் திட தேவையான எண்ணிக் கையில் மரங்கள் நடுவதில் மாநில அரசு தவறி விட்டது என்று இந்திய தலைமை தணிக்கையாளர் மற்றும் கணக்காயர் 2010ம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்ட வைகளை மறந்து விட முடி யாது. தற்போதைய சீரழிவை அரசியலாக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். அத் துடன் இப்பிராந்தியத்தின் பல வீனமான சுற்றுச்சூழல் குறித்த விஷயங்களில் அதிகாரிகள் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள் ளார். உத்தரகாண்ட் மாநிலம் அமைந்த நாள் முதல் இந்த மாநிலத்தை காங்கிரசும், பாஜக வும் மாறிமாறி ஆண்டு வந் துள்ளன.
எனவே இந்த சீர ழிவுக்கு இருகட்சி அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும். உத் தரகாண்ட பேரழிவை மனதில் கொண்டு மத்திய -மாநில அர சுகள் சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடிய விஷயங்களில் தீர்க்க மான முடிவுகளை எடுக்க வேண்டும். மனிதன் வாழ்வ தற்கு திட்டங்கள் தேவைதான். திட்டங்களுக்காக மனிதர் களை பலி கொடுக்க முடியாது

Monday, 24 June 2013

மதிமுக வினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிட்டனர்.

தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தாய்மூர் பகுதியில் பத்து நாட்களுக்கு மேல் தண்ணீர் வராததை கண்டித்தும் அசுத்தமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் வருவதாகவும் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் மதிமுக வினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிட்டனர். சாக்கடை நீர் போன்று வரும் குடிநீருடன் வந்த மதிமுக வினர் வளர்ச்சி அலுவரிடம் கோரிக்கையை முன் வைத்தனர்,  வளர்ச்சி அலுவலர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். சரியான நடவடிக்கை இல்லையெனில் வரும் 7 தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட போவதாக மதிமுக ஒன்றியச் செயலாளர் உத்திராபதி தெரிவித்தார். இதில் நகர செயலாளர் ஜெயபால், ஊராட்சி கழக செயலாளர் அரசு, திமுக கிளைச் செயலாளர் வீரசேகர், பக்கிரிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Friday, 21 June 2013

இந்திய கம்êனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தலைஞாயிறு மணக்குடியில் ஒன்றியக்குழு சார்பில் கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.



மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் சாலை மறியல்





நாகப்பட்டினம், ஜூன் 20-விவசாய விளை நிலங் களையெல்லாம் ரியல் எஸ் டேட் ஆக்கி, வீட்டு மனை களாக விற்பனை செய்கின்ற நாசகரப் போக்கை எதிர்த்து, நாகை மாவட்டம், தலை ஞாயிறு ஒன்றியம், கொத் தங்குடி பேருந்துநிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தலைஞா யிறு ஒன்றியம் சார்பில், வியாழக்கிழமைகாலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மாபெரும் சாலை மறி யல் போராட்டம் நடை பெற்றது.சி.பி.எம்.தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் அ. வேணு சாலை மறியலுக்குத் தலைமை தாங்கினார்.
கட்சி யின் மாவட்டக் குழு உறுப் பினர் வி.அம்பிகாபதி, விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.முருகே சன், விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றியத் தலைவர் பி.எஸ்.டி.அசோகன், வி.தொ.ச. ஒன்றியச் செய லாளர் டி.செல்லையன், விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வி.ராஜகுரு, வாலி பர் சங்க ஒன்றியச் செயலா ளர் ஏ.ராஜா உள்ளிட்டோர் கோரிக்கை உரையாற்றினர்.கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாள ருமான வி.அமிர்தலிங்கம் கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினார். இந்தச் சாலை மறியல் போராட்டத்தினால், பட்டுக்கோட்டை, திருத் துறைப்பூண்டி, நாகை, வேளாங்கண்ணி, தலை ஞாயிறு, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்குச் செல் லும் போக்குவரத்து 3 மணி நேரமாக ஸ்தம்பித்தது. அதன் பின்னர், நாகை வருவாய்க் கோட்டாட்சியர் வே.மணிகண்டன், நிகழ் விடத்திற்கு வருகை தந்து, கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி னார்.
அடுத்த 10 நாட்களுக் குள், இந்தக் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாக விற்ப னைக்குச் செல்வது தடுத்து நிறுத்தப்படும், இவ்வாறு விளை நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக ஆவ தற்கு அனுமதியளித்த வட் டாட்சியர் மற்றும் சம்பந் தப் பட்ட அலுவலர்கள் மீது துறை வாரியான நட வடிக்கை எடுக்கப்படும், மற்றும் இதுவரை, ரியல் எஸ்டேட்டுகளாக மாறி யுள்ள நிலங்களில் அரசுக்கு உரிமையான நிலங்களோ, புறம்போக்கு நிலங்களோ பறிபோயிருந்தால், அவை சட்டப்படி மீட்கப்படும் என்று வருவாய்க் கோட் டாட்சியர் வே.மணிகண் டன் உறுதியளித்ததன் பேரில், சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Thursday, 13 June 2013

நாம் தமிழர்

jiyQhapW khh;r; 28

   jiyQhapW mUNf Myq;Fb filj;njUtpy; ehk; jkpoh; fl;rp khngUk; gl;bdpg; Nghuhl;lk; eilngw;wJ.

mnkhpf;f jPh;khdk; jkpoh;fis Vkhw;Wk; jPh;khdk;, mij ehq;fs; Gwf;fzpf;fpNwhk;. ,dg;gLnfhiyr; nra;j ,yq;if kPJ rh;tNjr tprhuiz Ntz;Lk;. jdpj; jkpoPoj;jpw;fhd rh;tNjr ehLfspd; fz;zhzpg;gpy; Gyk;ngah;e;j <oj;jkpoh;fisAk; thf;fspf;fr; nra;Ak; nghJthf;nfLg;G elj;j Ntz;Lk;. Fog;gkw;w njspthd jPh;khdj;ij I.eh.tpy; ,e;jpa muR Kd;nkhopa Ntz;Lk;. Mrpa ehLfs; rh;tNjr tprhuizf; FOtpy; ,lk;ngwf; $lhJ. jkpof murpd; Nfhhpf;ifia Vw;W ,yq;if murpd; kPJ nghUdhjhu jil tpjpf;f Ntz;Lk;. Rpq;fs ,dntwp ,uhZtj;jhy; njhlh;e;J elj;jg;gLk; jha;jkpof kPdth; gLnfhiyia clNd jLj;J epWj;jp ,dp xU kPdtUf;F $l ve;j tpjkhd Mgj;Jk; tuhJ vd;W kj;jpa muR cWjp mspf;fNtz;Lk;. fr;rj;jPit kPl;L jk;of kPdth;fspd; tho;thjhuk; fhj;jpl Ntz;Lk;. Vd Kof;fkpl;ldh;. Nghul;lj;ij khtl;l mikg;ghsh; jq;f.epiwe;j nry;tk;, khtl;l jiyth; KUfNty;, xd;wpa nrashyh; ghY,Ntjhuz;ak; kw;Wk; jiyQhapW gFjp xUq;fpidg;ghsh;fs; jk;gp mwpT, uhtzd; MfpNahh; Kd;dpiyapy; eilngw;wJ.

தலைஞாயிறு


jpUj;Njh; gtdp




jiyQhapW Nfhb mw;Gjh; Gdpj me;Njhzpahh; Mya 30 Mk; Mz;L jpUj;Njh; gtdp jiyQhapW ehd;F tPjpfis cyh te;j NghJ vLj;j glk;.

தலைஞாயிறு - ஜனநாயக வாலிபா் சங்கம்


Monday, 3 June 2013

கலைஞா் 90வது பிறந்த நாள் விழா - THALAINAYAR

 fof nfbNaw;wk;


jiyQhapW [Pd; 3
    jpKf jiyth; fiyQhpd; 90tJ gpwe;j ehs; tpoh jiyQhapW 11 tJ thh;by; jpKfofk; fof Kd;dhy; xd;wpa nrayhsh; gd;dPh; nry;tk; fof nfhbapid Vw;wpitj;jhh;. tpohtpy; fof njhz;lh;fs; eh$h;fdp, Nrfh;, tPuFkhh;,gF&jPd;, %h;j;jp, Rg;ukdpad; MfpNahh; fye;J nfhz;ldh;. md;idNty; mth;fs; ,dpg;G toq;fpdhh;. kw;Wk; jpushd jp.K.f. njhz;lu;fs; fye;J nfhz;ldu;.

கலைஞா் 90வது பிறந்த நாள் விழா - THALAINAYAR

jp.K.f . fof nfhbNaw;wk;






jiyQhapW [Pd; 3




jp.K.f. jiytu; jpU.K.fUzhepjp mtu;fspd; 90 tJ gpwe;j ehs; tpoh jiyQhapW Ng&uhl;rp filj;njUtpy; jp.K.f . fof nfhb Vw;wp itj;J efug; nghWg;ghsu;fs; uhN[e;jpud; nghJ kf;fSf;F ,dpg;G toq;fpdhh;. tpohtpy; eh$u;fdp, gd;dPh; nry;tk;Nrfu;, uhkjh];, Ng&u; ,isQuzp mikg;ghsu; uNk~;12 tJ thu;L fTd;rpyu; nre;jpy;Fkhu;, kw;Wk; jpushd jp.K.f. njhz;lu;fs; fye;J nfhz;ldu;.

Sunday, 31 March 2013

மிரட்டல் காரணமாக ஈபில் டவரின் பார்வையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்

மிரட்டல் காரணமாக ஈபில் டவரின் பார்வையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று எனப் புகழ் பெற்றது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர் ஆகும். 1889ஆம் ஆண்டு கட்டப்பட இந்த டவர், உலகின் உயரமான கட்டமைப்பு என்ற பெருமையுடன், பிரான்சின் புராதான கலைச்சின்னனமாகவும் விளங்குகின்றது. நாள்தோறும், இதனைச் சுற்றிப்பார்க்க வருபவர்களில் வெளிநாட்டுப் பயணிகளும் அடங்குவர்.

2011-ஆம் ஆண்டில், இதனைத் தகர்க்கப்போவதாகப் பலமுறை வந்துள்ள மிரட்டல் எச்சரிக்கைகளால், இங்கு வந்த பார்வையாளர்கள் 4,000 பேருக்கும் மேல் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், நேற்று சனிக்கிழமை, அந்நாட்டு நேரப்படி 7 மணி அளவில், ஒரு அனாமதேய மிரட்டல் எச்சரிக்கை தொலைபேசி மூலம் வந்துள்ளது.

இதனால், அப்போது அங்கிருந்த பார்வையாளர்கள் 1400 பேரும் அப்புறப்படுத்தப்பட்டு, மோப்பநாய்கள் உதவியுடன் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தமுறை வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்புப்பணியில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். இந்த சோதனை பல மணி நேரம் நீடித்தது.

ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த மாலி நாட்டில், புரட்சியாளர்களை ஒடுக்க, அரசுக்கு ஆதரவாக பிரான்ஸ் தனது ராணுவத்தினரை அனுப்பியுள்ளது. இதனால் எழும் தொடர் அச்சுறுத்தல்களால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Saturday, 30 March 2013

வேளாங்கண்ணி



வேளாங்கண்ணியில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனைநாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர்.



நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளி நிகழ்ச்சியாக திருச்சிலுவை ஆராதனை உள்பட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.
கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் புனித வெள்ளி நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படும்.
அந்த வகையில், புனித வெள்ளி நாளான வெள்ளிக்கிழமை மாலை வேளாங்கண்ணி பேராலயத்தில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முதல் நிகழ்ச்சியாக, இறைவார்த்தை வழிபாடு- பொது மன்றாட்டு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, திருச்சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதில், சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவைப் பாதை நிறைவேற்றுதல், சிறப்பு மறையுரை ஆகியன நடைபெற்றது.
பின்னர், திருச்சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரானின் திருவுடல் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு, திருத்தலக் கலையரங்கத்திலிருந்து, பேராலய கீழ்க்கோவிலுக்கு பவனியாக கொண்டுச் செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பேராலய அதிபர் ஏ. மைக்கில் தலைமை வகித்து, சிறப்பு வழிபாடுகளை நிறைவேற்றினார். பேராலய துணை அதிபர் ஆரோக்கியதாஸ் மற்றும் உதவிப் பங்குத் தந்தையர்கள் முன்னின்று வழிபாடுகளை நடத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும், புதுவை, கேரளம், ஆந்திரம் உள்பட பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த திரளான பக்தர்களும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

தனி ஈழம் கோரிக்கையை இந்தியாவால் செயல்படுத்த முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்



ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டி அளிக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். உடன் (இடமிருந்து) மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல்.முத்துகுமார் (வடக்கு), ஈ.பி.ரவி (மாநகர்), ஆர்.எம்.பழனிசாமி.

தனி ஈழம் கோரிக்கையை இந்தியாவால் செயல்படுத்த முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தும் தமிழக மாணவர்கள், தங்களது எதிர்கால நலன் கருதி போராட்டத்தைக் கைவிட்டு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையில் உதவ முடியுமோ, அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி உதவியுள்ளது. ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் கட்சி அமைதியாக இருப்பதாக சிலர் பிரசாரம் செய்கின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இருந்து ஒரு சில ஊடகங்களுக்கு பண உதவி கிடைப்பதால், அவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்னையை பூதாகரமாக வெளியிடுகின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 2 தீர்மானங்களில் இருக்கும் உணர்வுகளையும் காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. அதேநேரத்தில் தனி ஈழம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இப்போது இந்தியாவால் செய்ய இயலாது. பிற நாடுகளுடன் சேர்ந்து, சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இந்தியாவே நேரடியாகக் களம் இறங்க முடியாது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதை இந்தியாவால் உடனடியாகச் செய்ய முடியாது. இந்தியாவின் இறக்குமதி - ஏற்றுமதி பெரும்பாலும் இலங்கை வழியாகவே நடைபெறுகிறது. எனவே, பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்த பிறகே இந்தியா தீர்க்கமான முடிவுக்கு வர முடியும்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் விளையாடக் கூடாது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக உள்நோக்கத்துடன் இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம் கருத்துத் தெரிவித்திருந்தால், அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற மத்திய அரசு தயங்கக் கூடாது என்றார்.

புதிய ரயில் பாதை பணிகள்: டி.ஆர். பாலு ஆய்வு


டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் பாதைத் திட்டப் பணிகள் குறித்து ரயில்வே நிலைக் குழுத் தலைவரும், திமுக மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - திருக்குவளை - நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - காரைக்குடி, மன்னார்குடி  பட்டுக்கோட்டை, தஞ்சை - ஒரத்தநாடு பட்டுக்கோட்டை ஆகிய புதிய ரயில் பாதைகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டார். அப்போது, அவரிடம் தங்கள் கிராமத்தின் நடுவே அமைக்கப்படவிருக்கும் ரயில் வழித்தடப் பணிகளால் நூற்றுக்கணக்கான தனியார் கட்டடங்களும், பொதுச் சொதுக்களும் சேதம் அடையும் என்பதால், மாற்று வழியில் இத்திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தென்னமநாடு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாலு, அங்கிருந்த ரயில்வே அலுவலர்களை உடனடியாக தென்னமநாடு பகுதிக்குச் சென்று, ரயில் திட்டத்தின் உத்தேச வரைவை மாற்றுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமா என்பதை அந்த கிராம மக்களிடம் கலந்துபேசி,  முடிவு எடுக்கக் கேட்டுக் கொண்டார்.
இதன்படி, அலுவலர்களும் - கிராம மக்களும் கலந்து பேசி சரியான வழித் தடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
இதேபோல பட்டுக்கோட்டை அருகில் உள்ள கிறிஸ்துவ ஆலயம் அகற்றப்படாமலிருக்க ரயில்வே துறையின் திட்ட வரைபடத்தை உருவாக்க வேண்டும் என போதகர் ஜேக்கப் செல்வராஜ் அடிகளார் தலைமையில் கிறிஸ்துவர்கள் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலித்து, உரிய முடிவு மேற்கொள்வதாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.

நாகப்பட்டினம், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாகையில் விசுவ இந்து பரிசத் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்


நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில்விசுவ இந்து பரிசத் அமைப்பினர் சார்பில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விசுவ இந்து பரிசத் அமைப்பு மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார்.
 
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாகையில் விசுவ இந்து பரிசத் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்போராட்டத்தில் தமிழர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை கண்டித்தும், மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு உடனடி தீர்வு காணாத மத்திய அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 
போராட்டத்தில் சிவசேனா இந்து அதிரடிப்படை மாநில தலைவர் தங்க.முத்து கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அலுவலகத்தில் சிங்களர்கள் தாக்குதல்


இலங்கையின் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று பொது சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, இலங்கை தேசியக் கொடிகளுடன், வந்த முகமூடி ஆசாமிகள் திடீரென அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பொருட்களையும் அடித்து நொறுக்கினர். மேலும் தமிழர்களைப்பற்றி கடுமையான வார்த்தைகளால் திட்டினர். 
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அலுவலகத்தில் சிங்களர்கள் தாக்குதல்

இந்த தாக்குதலில், இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் அவர்களை சிங்கள போலீசார் விடுவித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது, சிங்கள புலனாய்வுத்துறை இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களிடம் செல்வாக்கு கொண்ட கட்சியாகும். இந்த கட்சிக்கு 13 எம்.பி.க்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரம் தலைமையில் மத்திய திட்டப்பணிகள் ஆய்வு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு



 
ப.சிதம்பரம் தலைமையில் மத்திய திட்டப்பணிகள் ஆய்வு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு
சிவகங்கையில், மத்திய அரசு மூலம் அமல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இன்று ஆய்வு செய்தார். இந்திரா காந்தி வீட்டு வசதி திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, கண்காணிப்பு குழுவினரிடம் கேட்டறிந்தார்.
 
பொதுவாக  இந்த கூட்டத்தில் 12 பஞ்சாயத்து தலைவர்கள், 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பங்கேற்பார்கள். ஆனால் இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 12 பஞ்சாயத்து தலைவர்கள், 4 எம்.எல்.ஏ.க்கள், காரைக்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
 
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின்மூலம், அளவிதாங்கன், கீழையூர் காலனி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
 
புரோக்கர்கள் மற்றும் இடைத்தரகர்களை தவிர்க்கவே “உங்கள் பணம் உங்கள் கையில்” திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதிலும் குறுக்கீடுகள் இருக்கின்றன.
 
எனவே, அரசின் சலுகைகளை முழுமையாக பெறுவதை உறுதி செய்யும் வகையில், முதியோர் பென்ஷன், கிராமப்புற வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்ட பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை அனுப்ப அரசு முடிவு செய்தது. கல்விக் கடன் திட்டத்தினால் நாடு முழுவதிலும் உள்ள ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பயன் அடைந்திருக்கிறார்கள், என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அகங்காரப் போக்கினால் ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி பறிக்கப்படலாம்

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கரு ணாநிதி மெளனம் சாதித்து, இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தொட ர்ந்தும் திரைமறைவில் ஆதரவு தெரிவிக்கும் கொள்கையை மிக வும் சாதூரியமான முறையில் இப்போது நிறைவேற்றிக் கொண்டி ருக்கிறார்.
அதேவேளையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியின் அதிகார மோகத்தில் ஆழ்ந்திருக்கும் ஜெயலலிதா அம்மையார் செய்வதறி யாது எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைத்து இன்று இந்திய அரசியலில் ஒரு சர்ச்சைக்குரிய பெண்ணாக விளங்குகிறார்.
இந்தியாவின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக விளையாட் டுத்துறையை குறிப்பாக, இந்திய மக்களில் சுமார் 90சதவீதமானோ ரின் அபிமானத்தைப் பெற்ற கிரிக்கட் விளையாட்டை அரசியல் மயப்படுத்தி இந்தப் பெண்மணி அனைத்துலக கிரிக்கட் ரசிகர்க ளின் கிண்டலுக்கு இலக்காகியிருக்கிறார்.
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கட் போட்டிகளில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் விளையாடுவதை தமிழ்நாடு அரசாங்கம் அனும திக்காது என்று ஜெயலலிதா அறிவித்திருப்பது குறித்து இலங்கை வீரரும் சுழல் பந்துவீச்சில் உலக சம்பியனுமான முத்தையா முரளி தரன் தெரிவித்திருக்கும் கருத்து ஜெயலலிதா அம்மையாரை ஒரு அவமான சின்னமாக மாற்றியிருக்கிறது.
நான் இலங்கை அணியில் 20 ஆண்டுகாலம் விளையாடிய ஒரு தமி ழனாகும். வெளிநாடுகளில் எனக்கு எத்தனையோ சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் தோன்றிய போது இலங்கை கிரிக்கட் அணியைச் சேர்ந்த எனது சகாக்கள் எனக்காக போராடி என்னை பிரச்சினைக ளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கமும் எனக்கு சகல உதவிகளையும் செய்ய தயக்கம் காட்டவில்லை என்று முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.
முன்னர் இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடை யில் மோதல்கள் ஏற்பட்ட போதிலும் இன்று எனது நாட்டில் மக் கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இந் திய தரப்பினர் இலங்கைக்கு கட்டாயம் வந்து முன்னர் நடந்தவ ற்றை மறந்து மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதை நேரடியாக பார்க்க வேண்டும். அன்றைய நிலை போல் மீண்டுமொரு யுத்த த்தை இலங்கை மக்கள் விரும்பவில்லை. நாம் கிரிக்கட் வீரர்கள். எமது கிரிக்கட் விளையாட்டின் மூலம் நாம் மக்களை மகிழ்விக்கி றோம். அரசியலுக்கு இறங்க நாம் விரும்பவில்லை என்றும் முரளி தரன் யதார்த்தபூர்வமாக ஜெயலலிதா அம்மையாருக்கு ஒரு தக்க பதிலை அளித்திருப்பது பாராட்டக்கூடிய விடயமாகும்.
இப்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய வரம்பை மீறி இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அநாவசியமான அழுத்த ங்களை கொண்டுவருவதற்கு எத்தனித்து வருகிறார். இலங்கை இந் தியாவின் நட்பு நாடு என்று நாம் கூறுவதை நிறுத்த வேண்டும். மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக்குற்றவாளிகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்க வேண்டும். அடக்கு முறையை நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதார தடைவி திக்க வேண்டும்.
இந்த யோசனைகளை இந்திய மத்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முன்மொழிந்து அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜெயலலிதா அம்மையார் சர் வாதிகார போக்கில் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவு பிற ப்பிக்கும் தொனியில் அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்களை இந்திய மத்திய அரசாங்கம் துச்சமாக மதித்து அதனை பொருட்படுத்தப் போவதில்லை என்று புதுடில்லியில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது பற்றி கருத்து தெரிவிக்கும் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணிய சுவாமி, அதிகார மமதையில் செய்வதறியாது கொக்க ரித்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் கொட்டத்தை மத்திய அரசாங்கம் அடக்குவது அவசியமாகும். இல்லையானால் ஜெயல லிதா பொறுப்பற்ற விதத்தில் வெளியிடும் கருத்துக்கள் இந்தியாவு க்கு சர்வதேச அரங்கில் அவமானத்தை ஏற்படுத்திவிடும் என்று அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா இவ்விதம் தொடர்ந்தும் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அநாவசியமான அழுத்தங்களை கொண்டு வந்து தனது அர சியல் ஆதிக்கத்தை பெருக்கிக் கொள்ள முயற்சித்தால் நிச்சயம் ஜெயலலிதா பாதகமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியி ருக்கும் என்று எச்சரித்திருக்கும் சுப்ரமணிய சுவாமி அவர்கள், ஜெயலலிதாவின் தமிழ்நாட்டு மாநில அரசாங்கத்தை மத்திய அர சாங்கம் கலைத்துவிட்டு அங்கு ஆளுநர் ஆட்சியை பிரகடனம் செய்தால் ஜெயலலிதாவுக்கு அடங்கிப் போவதை விட வேறெ ன்ன செய்ய முடியுமென்று அவர் கேட்டுள்ளார்.
ஜெனீவா பிரேரணை மீது தமிழ்நாட்டில் மாணவர்களை பகடைக்காய் களாக வைத்து ஆரம்பித்த இலங்கை எதிர்ப்பு போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கை ஓங்கி, கருணாநிதியின் அர சியல் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் பார்த்து அச்சம் கொண்ட ஜெயலலிதா, திடீரென்று தனது போக்கை மாற்றியிருக்கி றார். இலங்கைத் தமிழர்களின் மீது அன்பும், பாசமும் கொண் டவரைப் போல் சினிமாவில் நடிப்பதை விட சிறப்பாக நடித்து விளையாட்டுத்துறையை அரசியல் மயமாக்கியுள்ளதோடு, புதுப் புது கோரிக்கைகளை இந்திய மத்திய அரசாங்கத்திற்கு முன்வை த்து தனது மக்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்வதற்கு எடுக் கும் தந்திரோபாயமே இதுவென்று தமிழ்நாட்டின் அரசியல் அவ தானிகள் ஜெயலலிதாவைப் பார்த்து இன்று கிண்டல் செய்கிறார் கள்.

தமிழர்கள் விரட்டியடிப்பு- Tamil People

இங்கே பொங்க முடியாது ஓடோடிப் போய் விடுங்கள்; நாயாறு சென்ற தமிழர்கள் விரட்டியடிப்பு.
news
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறுப் பகுதியில் அமைந்துள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலில் தமது நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற தமிழ் மக்களை  "இங்கே வர வேண்டாம் ஓடிப் போங்கள்'' என்றவாறு இராணுவத்தினர் விரட்டியடித்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
 
நாயாறுப் பாலத்துக்கும் கொக்குத்தொடு வாய்க்கும் இடையிலுள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலுக்கு பங்குனி உற்சவத்தை முன்னிட்டு 15 தொடக்கம் 20 வரையிலான குடும்பங்கள் நேற்று நண்பகல் சென்றன கோயில் பொங்கலுக்குரிய ஆயத்தங்களை அந்தக் குடும்பத்தினர் மேற்கொண்டிருந்தனர். 
 
தமது நேர்த்தியைச் செலுத்துவதற்காகவே அவர்கள் அங்கு சென்றிருந் தனர். திடீரென  அங்கு இராணுவத்தினர் நால்வர் வந்து சேர்ந்தனர். அவர்களில் ஒருவர், "இங்கு யாரும் பொங்கக்கூடாது பொங்குவதாக இருந்தால் நாயாறுப் பாலத்துக்கு அப்பால் கொண்டு சென்று பொங்குங்கள்'' என்று கூறியவாறு அங்கிருந்து விரட்டினார் '' என்று மக்கள் உதயனிடம் தெரிவித்தனர்.
  
அதை அடுத்து வேதனையுடன் திரும்பிச் சென்ற அவர்கள் சேருவில பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமு சிவலோகேஸ்வரனிடம் முறையிட்டனர். ஆலயம் அமைந்துள்ள பகுதியைச் சூழவும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துவதாக சிவலோகேஸ்வரன் தெரிவித்தார். 

ராமேஸ்வரத்தில் 5000 மீனவர்கள் ரெயில் மறியல்

ராமேஸ்வரத்தில் 5000 மீனவர்கள் ரெயில் மறியல்



கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்பிடி தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

இப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக இன்று ரெயில் மறியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தனர். இதையடுத்து மீனவ சங்கங்களுடன் மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். வரும் புதன் கிழமைக்குள் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். அதனை மீனவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. 

இதையடுத்து திட்டமிட்டபடி மீனவர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து தங்கச்சிமடம் வரை மீனவர்களும், பெண்களும் என சுமார் 5000 பேர் தண்டவாளத்தில் அமர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது

ஆழியார் அணை - Aaliyaru so trier




ஆழியார் அணை தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். இங்கு மனமகிழ்விற்காக பூங்கா,மீன் காட்சியகம், தீம் பார்க் முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
1962ஆம் ஆண்டு ஆழியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணைகோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து உள்ளது. அம்பரம்காளையம் தர்கா ஆழியாற்றின் கரையில் உள்ளது.
இது பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிக நீளமான அணையாகும் - சுமார் 2 கி.மீ. மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த சூழல் மிகவும் மனதைக் கவர்வதாக உள்ளது. படகு சவாரியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இந்த அணையின் அருகாமையில் சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி சுற்றுலா மையத்தின் கவர்ச்சியைக் கூட்டுகிறது.இங்கு எடுக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படங்கள் இவற்றின் பரவலான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளன.

Tamilnadu colleges open date ?




அரசு கல்லூரிகள் ஏப்ரல் 1-ந்தேதி திறக்க வாய்ப்பு இல்லாததால் செமஸ்டர் தேர்வுகள் மேலும் தள்ளிப்போகிறது.
இலங்கை பிரச்சினையை முன்னிறுத்தி கல்லூரி மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசு கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து கல்லூரிகளும் 18-ந்தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டன.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 21-ந்தேதி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரித்ததால் வெற்றி பெற்றது.
இதனால் மாணவர்கள் போராட்டம் தணியும், அதனைத் தொடர்ந்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏப்ரல் 1-ந்தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. அதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் 1-ந்தேதி கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களை போராட்டத்தை கைவிட்டு கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் கலை மற்றும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள். 1-ந்தேதி முதல் தனியார் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஏற்கனவே தனியார் நிகர்நிலை பல்கலக்கழகங்கள் திறக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான தனியார் கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகள் திங்கட்கிழமை திறக்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால் அரசு கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த வாரத்திற்குள் கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

World Sparrow Day-India ஏய்குருவி! சிட்டுக்குருவி!




ஏய்குருவி! சிட்டுக்குருவி!
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20 ஆம் நாள்உலக சிட்டுக்குருவி தினமாக அனுசரிக்கப்படுகின்றது. மனிதனுடன் நீண்ட காலமாக தொடர்புடையஒரு பறவையாக உள்ள சிட்டுக்குருவியானது உலகில் பலப்பகுதிகளில் காணப்பட்டாலும் இந்தியாஉள்ளிட்ட நாடுகளில் பெருமளவில் அழிவினை எதிர்நோக்குவதிலிருந்து மீட்டு பாதுகாக்கும்பொருட்டும் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்ப்படுத்தும் பொருட்டும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

அண்மைக் காலமாகப் பரபரப்பாகவும் வேதனையாகவும்பேசப்பட்டுவரும் பொருளாக உள்ளது சிட்டுக்குருவி. அலைபேசி (செல்போன்) கோபுரத்தின் கதிர்வீச்சினால்சிட்டுக்குருவியினம் அழிந்துவருவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. நீரிலிருந்துநிலத்தில் முதலில் காலூன்றிய ஊர்வனவற்றிலிருந்து ஒரு பக்கம் பறவைகளும் மற்றொரு பக்கம்பாலூட்டிகளுமாய்ப் பரிணாமம் அடைந்து தோன்றிய உயிரினங்களுள் சிட்டுக்குருவி பறவையினத்தில்பேசெரிடே என்னும் குடும்பத்தினைச் சார்ந்தவையாகும். இக்குடும்பத்தைச் சார்ந்த குருவிகளேஉண்மையான சிட்டுக்கள் என வழங்கப்படுகின்றன. இவை சிறிய உடலுடன் பழுப்பு நிறத்தில் குட்டையானவாலுடன் சக்திவாய்ந்த அலகுகளுடன் கூடிய உடலமைப்புடன் காணப்படும். உலகம் முழுவதிலும்பேசர் பேரினத்தின் கீழ் சுமார் 30 சிற்றினங்கள் காணப்படுகின்றன. இவை மனித இனத்துடன்நெருக்கமான உறவைக்கொண்டு மனித வாழிடங்களில் எவ்வித நெருடலும் இல்லாமல் வாழும் தகவமைப்பினைப்பெற்றுள்ளன. இத்தகவமைப்பே குறிப்பாக பேசர் டொமஸ்டிகஸ் (Passer domesticus) எனப்படும் சிட்டுக்குருவிகள் நமது வீடுகளில்நம்முடன் சகசமாய் வாழக்காரணமாக விளங்குகிறது.
உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும்இச் சிட்டுக்குருவி இனம் இந்தியாவிலும் மிகுதியாகக் காணப்பட்டது. ஆனால் தற்பொழுது இவ்வினம்பெருமளவில் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகின்றன. இவ்வினம் அழிந்ததற்கான தெளிவான காரணங்கள்தெரியாத போதிலும் செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு முக்கியக் காரணமாகநம்பப்படுகின்றது. சிட்டுக்குருவியின் வாழிடம் பெருமளவில் அழிக்கப்பட்டதாலும், பயிர்பெருக்கத்திற்காகஅதிக அளவில் நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லியினாலும் பாதிக்கப்பட்டு பெருமளவில்இன்று சிட்டுக்கள் காணமல் போயின.

எனவே இந்தியாவில் சிட்டுக்குருவியின்நடமாட்டத்தினைக் காட்சிப்படுத்தும் பொருட்டு ”சிட்டிசன் ஸ்பாரோ” (Citizen Sparrow)எனும் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டு இணையம் வழியே தகவல் திரட்டப்பட்டு வருகின்றது.இக்கணம் வரை சுமார் 6000 பேர் 8500 இடங்களில் சிட்டுக்குருவிகள் உள்ளதைப்பதிவு செய்துள்ளனர்.உண்மையிலேயே இத்தகவல் இயற்கை ஆர்வலருக்கு மகிழ்ச்சியான ஒன்றாகும். இந்தியா முழுவதிலும்சிட்டுக்குருவிகள் காணப்படுவது பதிவாகிய போதிலும், இந்தியாவின் மையப்பகுதிகளில் மிகக்குறைந்தஅளவே பதிவாகி உள்ளன. தமிழகம் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக அளவில் இக்குருவிகள்காணப்படுகின்றன.

’சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதிதெரியுமா? என்னை விட்டுப் பிரிந்தக் கணவன் இன்னும் வீடு திரும்பல! எனத் தலைவி தன் துயரத்தினைச்சிட்டுக்குருவியிடம் பகிர்ந்துகொள்ளும் செயலிலிருந்து, குடும்ப உறுப்பினர் போல சிட்டுக்குருவிநம்முடன் வாழ்வது இந்தச் சினிமா பாடல் மூலம் நாம் அறியலாம். மேலும் ஏ குருவி, குருவிகுருவி, சிட்டுக் குருவி, உன் சோடி எங்க? அதகூட்டுக்கிட்டு எங்கவிட்டத்தல வந்துகூடுகட்டு எனச் சிட்டுக்குருவியினைத் தலைவன் அழைப்பதிலிருந்தும் சிட்டுக்குருவி மனிதனுடன்நெருங்கி வாழ்ந்ததை நாம் உணரலாம்.

மனிதனுடன்ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சிட்டுக்குருவியினைப்பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களிலும்அபரிதமாகக் காணப்படுகின்றன. கிராமங்களில்உள்ள வீடுகளில் தாழ்வாரங்கள், இறவாணங்களில் உள்ள சிட்டுக்குருவியின் கூட்டினைப் பற்றியவர்ணனைகளும் சங்க காலத்தில் பதிவாகியுள்ளன. சங்ககால மக்கள் இயற்கையைவிரும்பி வாழ்ந்ததோடு தம்முடைய இலக்கியங்களிலும் இயற்கையைப் பதிவுச் செய்ததோடு இயற்கையைப்போற்றவும் செய்தனர். ஆனால் தற்காலத்தில் வெளிவரும் பாடல்களில் கூட இயற்கையைப் பற்றியவர்ணனைகள் குறைந்துவிட்டதாகச் சங்ககாலப் பாடல்களில் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள்வருத்தம் தெரிவிக்கின்றனர்.

எனவே மனிதனுடன் பன்னெடுங்கால தொடர்புடையஅமைதியான அன்பின் தன்மையினைப் போதிக்கும் இக்குருவியினத்தைக் காப்பது நமது கடமையன்றோ!






Dr.P.MARIAPPAN

Asst Professor

Department of Zoology
Rajah Serfoji Govt College
Thanjavur 613 005
TAMIL NADU
INDIA





நம் நாடு



நாடுவிட்டு நாடுவந்த பின்பும் கூட


    நம்மொழியின் மேல்பற்றே உள்ள தையா!

கூடுவிட்டுக் கூடுபாயும் மாயம் போலக்

    குடிகொண்ட நாட்டுமொழி வந்த தையா!

வீடுவிட்டு வெளிசென்றால் விருப்ப மின்றி

    வேற்றுமொழி பேசியாக வேண்டு மையா!

கோடுபோட்டு வாழ்ந்தாலும் கொள்கை தன்னைக்

    கூறுபோட்டு விற்கவேண்டி உள்ள தையா!


மேசைநிறைய புத்தகங்கள் இருந்த போதும்

    மெய்யறிவு படித்திடாமல் வந்தி டாது!

வீசைஎன்ன விலையென்று கேட்டுக் காசை

    வீசுவதால் உண்மையன்பு கிடைத்தி டாது!

ஓசையுடன் பாட்டெழுதிப் படைத்திட் டாலும்

    உள்ளிருக்கும் வாசகங்கள் புரிந்தி டாது!

காசைத்தே டும்உலகில் வாழ்ந்த போதும்

    கவிதைமொழி தமிழருக்குக் கசந்தி டாது!


தென்னவரின் தேமதுரத் தமிழின் ஓசை

    தேடியதைக் காதினிக்கக் கேட்டுக் கொண்டே

அன்னமிடும் அம்மாகைப் பக்கு வத்தை

    ஆசையுடன் அள்ளியள்ளி உண்ட போதே

விண்ணமுதம் என்பதெல்லாம் விண்ணில் இல்லை!

    வீட்டினிலே விருந்தோம்பும் பெண்ணி ருந்தால்

மண்ணுலகில் விண்ணுலகம் வந்து சேர்ந்து

    எண்ணமெல்லாம் தமிழோசை கேட்டே ஆடும்!


நம்மொழியின் மேல்பற்று நன்றே கொண்டு

    நாட்டமுடன் வந்துநாமும் பேசு கின்றோம்!

எம்மொழிக்கே இணையாக மொழியும் உண்டோ?

    இருந்திருந்தால் மனமங்குச் சென்று தங்கும்!

செம்மொழியாய்த் தேமதுரத் தமிழின் ஓசை

    செழிப்பாகக் கேட்டிடவே காத்து நிற்போம்!

எம்முறையும் எம்தமிழின் இனிமை கேட்டால்

    இன்பமிதே! வேறில்லை என்றே சொல்வோம்!


அருணா செல்வம்.